நவீனின் அடுத்த சீரியலில் ஜோடியாக நடிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி? அவரே வெளியிட்ட பதிவு!
கலர்ஸ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே தொடர் தற்போது நிறைவடைய போகிறது. இந்த தொடரில் சிவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீன், கண்மணியுடன் சேர்ந்து நடிப்பாரா எனக் கேட்டபோது அதற்கு பதில் அளிக்கும்படியான பேட்டி வைரலாகி வருகிறது.
இதயத்தை திருடாதே:
கலர்ஸ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் திடீரென முடிவுக்கு வந்துவிட்டது. எதற்காக இந்த தொடர் திடீரென முடிவுக்கு வந்தது என ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். சிவா கதாபாத்திரத்தில் நவீனும், சஹானா கதாபாத்திரத்தில் ஹேமா பிந்துவும் நடித்துக் கொண்டிருந்தார்கள். டிஆர்பியிலும் இதயத்தை திருடாதே தொடர் தான் முன்னிலையில் இருந்து வந்தது. ஆனால், திடீரென்று சீரியல் முடிவடையப் போகிறது என கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தனர்.
Exams Daily Mobile App Download
இதுகுறித்து தற்போது நவீன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது இதயத்தை திருடாதே தொடர் இவ்வளவு சீக்கிரமாக முடிவடைந்தது எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இத்தனை நாட்களாக சிவா கதாபாத்திரத்தை நான் வாழ்ந்து விட்டேன். தற்போது சீரியல் முடிவடையப் போகிறது என்று நினைத்தால் கண் கலங்குகிறது மற்றும் இதயத்தை திருடாதே தொடரின் அடுத்த சீசன் எடுக்கும் ஐடியாவில் தான் இருந்தோம். ஆனால் அடுத்த சீசனில் ஹேமா பிந்துவால் நடிக்க முடியாத காரணத்தினால் அந்த பிளான் அப்படியே நிறுத்தப்பட்டது. ஆனால் இதே தயாரிப்பாளருடன் மற்றொரு சீரியலில் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார்.
தனது கணவரின் பிறந்தநாளுக்கு புது பைக் பரிசளித்த விஜே மணிமேகலை – வைரலாகும் வீடியோ!
இது மட்டுமல்லாமல் சமீபத்தில்தான் நவீனுக்கும் செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரின் திருமணமும் கூடிய விரைவில் நடைபெற இருக்கிறது. ரசிகர்களும் இவர்களின் திருமணத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நவீன் நடிக்க இருக்கும் புது சீரியலில் கண்மணி நடிப்பாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது. நானும் இதுபற்றிக் கண்மணியிடம் கேட்டேன். ஆனால், நடிப்பில் ஆர்வம் இல்லை எனக் கூறி விட்டார் என நவீன் கூறும்படியான பேட்டி தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால் ரசிகர்கள் இருவரும் சேர்ந்து ஒரு விளம்பர படமாவது நடித்துவிட வேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.