தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? எக்ஸ்.இ தொற்று எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரவலின் 4ம் அலை பரவ தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அண்டை நாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தொற்று அதிகம் பரவியுள்ள 10 நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அத்துடன் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்கா, தீவு நாடான சமோவா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அத்துடன் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது ஒமைக்ரானை தொற்றை விட வேகமாக பரவ கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கொரோனாவின் 4ம் அலை பரவ தொடங்கியதை உணர முடிகிறது.
இந்தியாவிலும் எக்ஸ்.இ தொற்று கண்டறியப்பட்டால் மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் தமிழகத்தில் எக்ஸ்.இ தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் இருந்தால் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கும். அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.