கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் நாளை கருங்கல் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (ஏப்ரல் 4) மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. அதனால் விபத்துகள் ஏற்படுவது குறைந்துள்ளது. அதனால் இந்த பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 4) பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு!
இதனை தொடர்ந்து நாளை குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து கருங்கல் துணை மின் நிலையத்தின் மூலம் பயன்பெறும் பகுதிகளில் நாளை (ஏப்ரல் 4) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நாளை கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை, பாரக்கடை, குழிக்கோடு, எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, முருங்கவிளை, செல்லங்கோணம், காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, முள்ளங்கினாவிளை, கல்லடை, ஹெலன் காலணி, கஞ்சிக்குழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை (ஏப்.4) காலை 8 மணி முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.