தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் – ஆணை வழங்கிய முதல்வர்!
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பத்திரிக்கையாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
ஓய்வூதியம்:
தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக இருந்தது. அப்போது வைரஸ் பரவும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் அரசின் ஆணைக்கிணங்க வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் முடங்கினர். இத்தகைய சூழலில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மருத்துவத் துறையினர், காவலர்கள் போன்ற முன்கள பணியாளர்கள் நாடு முழுவதும் பணியில் ஈடுபட்டனர்.
Exams Daily Mobile App Download
கொரோனா தடுப்பு பணிகளில் இவர்களது பங்கு இன்றியமையாதது. இவர்களை தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கும், அரசுக்கும் தெரிவிக்கும் ஊடக துறையினரும் முன்கள பணயாளர்கர்களாக கருதப்படுவார்கள் என்று கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். மேலும் கடும் வெயிலிலும், மழையிலும் அயராது உழைக்கும் அவர்களது பணி பாராட்டத்தக்கது என்றும் கூறினார்.
இந்தியாவில் மீண்டும் உருவெடுத்துள்ள ஓமிக்ரானின் புதிய வகை – ஷாக்கிங் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து மாநிலத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மானிய கோரிக்கை விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டபடி பத்திரிகையாளர்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியத்திற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.