இந்தியாவில் மீண்டும் உருவெடுத்துள்ள ஓமிக்ரானின் புதிய வகை – ஷாக்கிங் தகவல்!
நாடு முழுவதும் கொரோனாவின் அச்சம் சமீபத்தில் தான் நீங்கியுள்ள நிலையில், தற்போது மேலும், ஒரு புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
புதிய வகை தொற்று:
2019-ம் ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் முதன்முதலில் அறியப்பட்ட கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவிற்கான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இந்த வகை வைரஸ் தொற்றுக்கள் தானாகவே உருமாற்றம் அடைந்து பரவி வருவது ஆரம்பத்தில் மக்களை மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
Exams Daily Mobile App Download
ஆல்பா வகை முதல் தொடங்கி தற்போது ஓமிக்ரான் வைரஸ் வரை பல்வேறு உருமாற்றங்கள் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றுகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரானின் பாதிப்புகள் அதிக பரவலை கொண்டிருக்கும், ஆனால் இறப்பு விகிதம் குறைவாக இருக்கும் என ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஓய்வூதியதாரர்களுக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்.. இன்று கடைசி நாள் – முக்கிய தகவல்கள் வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், ஓமிக்ரானின் புதிய XBB வகை வைரஸ் தற்போது இந்தியாவில் டெல்லி, மேற்கு வங்காளம், ஒடிசா, மகாராஷ்டிரா, போன்ற 9 மாநிலங்களில் பரவியுள்ளது. இதுவரை இத்தொற்றால் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக GISIAD என்ற சர்வதேச ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.