வேகமாக பரவும் எக்ஸ்இ (XE) எனும் புதிய வகை கொரோனா வைரஸ் – பீதியில் மக்கள்! WHO எச்சரிக்கை!
அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே தான் செல்கிறது. தற்போது எக்ஸ்இ (XE) எனும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற வைரஸ்களை விட எக்ஸ்இ வைரஸ் வேகமாக பரவ கூடியதாக இருக்கும் என WHO எச்சரித்துள்ளது.
எக்ஸ்இ (XE) வைரஸ்:
உலகம் முழுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று மக்களை மிகவும் ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பலியாயினர். கொரோனாவினை ஒழிக்க தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. கொரோனா அச்சத்தினால் பெரும்பாலான மக்கள் சரியாக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இருப்பினும் கொரோனாவினை முழுமையாக ஒழிக்கவே முடியவில்லை. தற்போது கொரோனா மூன்று அலைகளை தாண்டி நான்காம் அலையில் வந்து நிற்கிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மேலாண்மை பயிற்சி தொடக்கம்!
ஒவ்வொரு புதிய கொரோனா அலையின் போதும் புதிய வகை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே தான் இருக்கிறது. தற்போது வரை ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா உருவாகின. தற்போது சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் சீனா முதலான நாடுகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது ஒரு புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக புதிய ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஒமைக்ரானின் பிஏ.2 வகை புதிய வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் ஒமைக்ரானின் பிஏ.2 வகை புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒமைக்ரானின் BA.1 மற்றும் BA.2 ஆகிய இரு வைரஸும் கலந்து எக்ஸ்இ (XE) எனும் வைரஸ் பரவி வருகிறது. மற்ற கொரோனா வைரஸை விட எக்ஸ்இ (XE) எனும் வைரஸ் வீரியம் மிக்கதாக உள்ளதாகவும், விரைவில் பரவக் கூடியதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 600 மக்கள் ஒமைக்ரானின் எக்ஸ்இ வகை வைரசால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் மக்களும் பெரிய அளவில் பீதியடைந்துள்ளனர்.