ரேஷன் கடைகளில் புதிய நேர மாற்றம்.. இனி ஷிப்ட் முறையில் தான் இயங்கும் – சர்வர் விவகாரம் எதிரொலி!
பயோ மெட்ரிக் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் பொழுது, அதிக மக்கள் கூட்டத்தினால் சர்வர் அடிக்கடி செயலிழந்து விடும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தற்போது ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நேர மாற்றம்:
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கி கொள்ள உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால், ரேஷன் கார்டு தாரரின் பயோ மெட்ரிக் மூலம் தான் மாதாந்திர ரேஷன் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் டிசம்பர் 26ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில் அதிகரிக்க தொடங்கியது.
Follow our Instagram for more Latest Updates
அதிக மக்கள் கூட்டத்தின் காரணமாக சர்வர் செயல்பாடு பாதிக்கப்பட்டு, செயலிழந்து விட்டது. இதனால் டிசம்பர் 1ம் தேதியான கடந்த வியாழக்கிழமை முதல் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. தற்போது ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கம் ரேஷன் கடைகள் ஷிபிட் முறையில் தான் செயல்படும் என்றும் 7 மாவட்டங்களுக்கு தனி நேரமும், மற்ற 7 மாவட்டங்களுக்கு தனி நேரமும் அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ் – முதன்மை செயலாளர் வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!
Exams Daily Mobile App Download
அதன்படி, பத்தனம்திட்டா, வயநாடு, ஆலப்புழா, கொல்லம், பாலக்காடு,திருச்சூர், மலப்புரம், ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 5 முதல் 10 ம் தேதி வரையிலும், 19 முதல் 24ம் தேதி வரையிலும் 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும், மேலும், டிசம்பர் 12 முதல் 17 மற்றும் 26 முதல் 31 வரை மதியம் 2 மணி முதல் 7 மணி வரை செயல்படும். இதேபோல், கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், காசர்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 12 முதல் 17 வரையிலும், டிசம்பர் 26 முதல் 31 வரையிலும் காலை நேரத்திலும், டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும், 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பிற்பகல் நேரத்திலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.