தமிழகத்தில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வெயிட்டேஜ் முறை மாற்றப்பட்டதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஊழியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த ஆண்டு 58 வயதில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அரசு பணிக்காக காத்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பேரிடியாக விழுந்தது. அத்துடன் 2004ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2004ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற முடியும்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பயனடையும் அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது அந்த ஊழியர் பணியாற்றிய ஆண்டுகளை கணக்கீடு செய்து அதன் அடிப்படையில் முழு ஓய்வூதியம் பெற்று கொள்ளலாம். இதனை தொடர்ந்து ஒரு அரசு ஊழியர் தவிர்க்க முடியாத காரணத்திற்காக விருப்ப ஓய்வு பெறும் போது அவர்களுக்கு முழு ஓய்வூதியம் பெறும் வகையில் ‘வெயிட்டேஜ்’ முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வயது 60 வயதாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது வெயிட்டேஜ் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘இந்த’ 500 ரூபாய் நோட்டு செல்லாதா? PIB Fact Check சொல்வது என்ன?
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழக அரசு தவிர்க்க முடியாத அல்லது எதிர்பாராத காரணத்திற்காக விருப்ப ஓய்வு பெறும் போது அவர்களின் வெயிட்டேஜ் முறை ஊழியர் 55 மற்றும் அதற்கும் குறைந்த வயதில் ஓய்வு பெறும் போது 5 ஆண்டுகள் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதே போல் 56 வயதில் விருப்ப பெறும் போது 4 ஆண்டுகள், 57 வயதில் விருப்ப ஓய்வு பெறும் போது 3 ஆண்டுகள், 58 வயதில் விருப்ப ஓய்வு பெறும் போது 2 ஆண்டுகள், 59 வயதில் விருப்ப ஓய்வு பெறும் போது ஓராண்டு என வெயிட்டேஜ் முறை மாற்றப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.