TNPSC குரூப் 4 VAO தேர்வில் 5000 காலிப்பணியிடங்கள் – புதிய பாடத்திட்டம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்பை தொடர்ந்து குரூப் 4 தேர்வு அறிவிப்பை பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக, குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.
தேர்வாணைய தலைவர் அறிவிப்பு:
TNPSC மூலம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழக தேர்வர்கள் பெரிதும் எதிர்நோக்கும் தேர்வுகள் குரூப் 4 மற்றும் குரூப் 2 ஆகும். மேலும் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரைவாளர், மற்றும் நில அளவர் போன்ற பதவிகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மார்ச் 20 இல் நடைபெறும்!
இந்த நிலையில் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள TNPSC தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வைக்கும் கருவூல அறைகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேர்வாணையத்தின் தலைவர், ஓ.எம்.ஆர் மூலம் தேர்வு எழுதுவதால் ஏற்படும் தவறுகளை முழுவதுமாக களைய TNPSC பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. TNPSC தேர்வு வினாத்தாள்கள் கசிவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். இதை அடுத்து குரூப் 4 தேர்வு அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும், மேலும் குரூப்-4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத் திட்டம் (Syllabus) தயார் செய்யும் பணி ஒரு சில நாட்களில் முடிவடையும் என அறிவித்துள்ளார்.
குருப் 4 தேர்வு மூலம் 5000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேர்வுக்கான விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்களில் முறைகேடு நடைபெறாவண்ணம் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிரந்தர பதிவுடன் – ஆதார் அட்டை இணைப்பு கால அவகாசம் முடிந்து விட்டது . அந்த கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என கூறினார். ஆனால் முன்னதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா, நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் இணைப்பு கால அவகாசம் அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் தேர்வர்களிடம் நிரந்தர பதிவுடன் -ஆதார் அட்டை இணைப்பு குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.