தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய முத்துராசு – விறுவிறுப்பான திருப்பங்களுடன் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’!

0
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய முத்துராசு - விறுவிறுப்பான திருப்பங்களுடன் 'நாம் இருவர் நமக்கு இருவர்'!
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய முத்துராசு - விறுவிறுப்பான திருப்பங்களுடன் 'நாம் இருவர் நமக்கு இருவர்'!
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய முத்துராசு – விறுவிறுப்பான திருப்பங்களுடன் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’!

ஐஸ்வர்யாவின் கழுத்தில் கார்த்திக் தாலி கட்டப்போகும் சமயத்தில் சரியாக வந்து முத்துராசு திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார். இறந்தவர் எப்படி உயிரோடு திடீரென வரமுடியும் என ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் பிரச்சனைகளை விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் அப்படியே படம் போட்டு காட்டி கொண்டிருப்பதால் ஏராளமான மக்கள் இந்த சீரியல்களை ரசித்து பார்த்து வருகின்றனர். அந்த வகையில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மதுரையில் ‘மகளிர் மட்டும்’ நிகழ்ச்சி

மாயனின் தங்கையான ஐஸ்வர்யாவின் கணவர் முத்துராசு ஏற்கனவே இறந்து விடுகிறார். இதனால் தனது தங்கைக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க மாயன் முயற்சி செய்கிறார். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்த பிறகு முத்துராசின் அம்மா மற்றும் மாமா மாசாணி ஆகியோர் இந்த திருமணத்தை நடக்காமல் நிறுத்த முயற்சிக்கின்றனர். இருப்பினும் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி ஐஸ்வர்யா மற்றும் கார்த்திக்கின் திருமணம் நன்றாக நடந்து முடிந்துவிட்டது போல சமீபத்தில் புகைப்படங்கள் வைரலாகி வந்தது.

‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு விலகும் ஆலியா – சித்துக்கு ஜோடியாக இனி இவரா? ஆவலுடன் ரசிகர்கள்!

இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது கார்த்திக் ஐஸ்வர்யாவின் கழுத்தில் தாலி கட்டப்போகும் நேரத்தில் மாறன் வந்து அந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறார். மேலும் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஐஸ்வர்யாவின் கணவர் முத்துராசு அங்கு வந்து நிற்கிறார். அதுவும் சரியாக நடக்க முடியாமல் ஊன்றுகோல் வைத்தபடி வந்து நிற்கிறார். இறந்தவர் எப்படி திரும்பி வர முடியும் என ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இனிமேல் திருமணம் நடக்குமா நடக்காதா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!