சென்னையில் மெரினா கடற்கரையில் புதிதாக ஸ்மார்ட் கடைகள்? முக்கிய அறிவிப்பு!
சென்னையில் மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி:
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கொரோனாவின் தாக்கத்தால் ஊரடங்கு, பொது முடக்கம் போன்றவைகளால் மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளே அடைந்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். குழந்தைகளும் வெளியில் சென்று விளையாட முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மக்கள் வழக்கம் போல் வெளியில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
தமிழக பள்ளி மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
அந்த வகையில் சென்னையில், மக்களுக்கு உள்ள பொழுதுபோக்கு இடங்களில் அனைவரும் விரும்பப்படக்கூடிய ஒரு இடம் மெரினா கடற்கரையாக உள்ளது. இந்த கடற்கரைக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இந்த கடற்கரை உள்ளது. அனைத்து வயதினரும் வந்து பொழுது போக்கக்கூடிய இடமாக இருப்பதால் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகிழ்கின்றனர். இந்த கடற்கரையில் சுமார் 300 கடைகளுக்கு மேல் செயல்பட்டுவருகின்றன.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் தற்போது பல மாநிலங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்ற தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலமும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையை சுற்றியுள்ள கடைகளை அகற்றி அதற்கு பதில் விற்பனையாளர்களுக்கு ரூ. 16.5 கோடி மதிப்பில் 900 கடைகளை ஒதுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினாவில் கடை நடத்துபவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மெரினாவில் அங்கீகரிக்கப்பட்ட 1459 கடைகள் உள்ளன. ஆனால் தற்போது 900 கடைகளை மட்டும் சென்னை மாநகராட்சி ஒதுக்குவதில் மீதமுள்ள கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று தெரிவி்த்துள்ளனர்.