தமிழக பள்ளி மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் சுய நிதி பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின மாணவ மாணவியர்களுக்கு அரசு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன் படி பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 500 வழங்கப்படும்.
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 2) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் 6 ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1000மும், 7 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1500 ம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற பெற்றோர் மற்றும் பாதுகாவலர் ஆண்டுவருமானம் உச்ச வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மத்திய அரசின் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் பயிலும் பள்ளியின் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.