விஜய் டிவியில் புதிதாக களமிறக்கப்படும் 2 நிகழ்ச்சிகள் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் குஷி!
விஜய் டிவியில் தற்போது 8வது சீசனாக ‘சூப்பர் சிங்கர்’ ரியாலிட்டி நிகழ்ச்சியுடன், ‘வைதேகி காத்திருந்தாள்’ என்கிற புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இது தொடர்பான ப்ரோமோக்கள் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சி
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படும் ‘பிக்பாஸ்’, இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்புகளை பெறவில்லை. ஆரம்பத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசன் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்களும் வரவேற்புகளை பெறவே விஜய் டிவியின் TRP ரேட்டிங் ஏறிக்கொண்டே போனது. ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி சற்று சறுக்கலை சந்தித்து வருகிறது.
இப்போது இழந்த TRP ரேட்டிங்கை அதிகரிக்கும் விதமாக விஜய் டிவி புதிதாக 2 நிகழ்ச்சிகளை களமிறக்க இருக்கிறது. அந்த வகையில் வீக் எண்டில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘சூப்பர் சிங்கர்’ அடுத்த சீசனுக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறது. ஏற்கனவே 7 சீசன்களை ஜுனியர் மற்றும் சீனியர் என வெற்றிகரமாக முடித்துள்ள ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் ஜுனியர்களுக்கான 8வது சீசன் தற்போது துவங்க இருக்கிறது.
அந்த வகையில் தற்போது எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் துவங்க இருக்கும் ‘சூப்பர் சிங்கர்’ ஜுனியர் சீசன் 8 நிகழ்ச்சியில் முன்னணி திரைப்பட பாடகர்கள், சித்ரா, கல்பனா, சங்கர் மகாதேவன் ஆகியோர் வழக்கம் போல நடுவர்களாக இருப்பார்கள் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் டிவியில், நடிகர் ப்ரஜன் மற்றும் சரண்யா நடிப்பில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
மாரடைப்பு காரணமாக முன்னணி நடன இயக்குனர் சிவசங்கர் திடீர் மரணம் – பிரபலங்கள் இரங்கல்!
அதாவது, சொத்துக்காக ஒரு பணக்கார வீட்டுக்கு ராணியாக நடிக்க செல்லும் வைதேகிக்கு அந்த வீடு தன்னுடைய சொந்த வீடு என்று தெரிய வருகிறது. இப்படிப்பட்ட காட்சிகளுடன் புதிய சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில் அது பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. எப்படி என்றாலும் இந்த 2 புதிய நிகழ்ச்சிகளின் மூலம் இழந்த TRP ரேட்டிங்கை தக்க வைத்துக்கொள்ளும் விஜய் டிவியின் திட்டம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.