ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, ஜெனி அப்பாவிடம் மன்னிப்பு கேட்கும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி அலுவலகத்தில் ஒருவரின் உதவியுடன் ராதிகா வீட்டிற்கு வருகிறார். பின் செழியன் ஜெனி அப்பா, அம்மாவிடம் முன்னாள் நடந்த பிரச்சனைகளுக்கு மன்னிப்பு கேட்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், தீபாவளி அன்று கோபி ராதிகா வீட்டிற்கு எப்படி செல்வது என தெரியாமல் இருக்கிறார். அப்போது அலுவலகத்தில் வேலை செய்பவருக்கு போன் செய்து என்னை கூட்டி செல்லும் படி சொல்கிறார். பின் அவர் வர ஆபிசில் முக்கியமான வேலை இருக்கிறது என சொல்கிறார். கோபியின் அப்பா அதை சந்தேகத்துடன் பார்க்க சார் வந்தால் தான் வேலையை சரியாக முடிக்க முடியும் என சொல்கிறார். பின் கோபி அவருடன் செல்ல, கோபி அப்பா சந்தேகமாகவே பார்க்கிறார்.
விஜய் டிவி மதுரை முத்துவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!
பின் ராதிகா வீட்டில் மயூரா கோபி வர காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி வந்து தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். நீங்க வாங்கி கொடுத்த ட்ரெஸ் தான் போட்டிருக்கேன் என சொல்ல மூவரும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர். அதை எல்லாம் ராதிகாவின் அம்மா பார்த்து கோபப்படுகிறார். பின் ராதிகா சாப்பாடு எடுக்க சமையல் அறை வருகிறார். அப்போது ராதிகாவின் அம்மா வந்து தீபாவளி அன்று அவர் இங்கே இருப்பது சரி தான் ஆனால் இந்த உறவிற்கு பெயர் என்ன அவர் இங்கே தான் இருக்கிறார் என்றால் அவரையும் விவாகரத்து வாங்க சொல்லு என சொல்கிறார். முதலில் எனக்கு விவாகரத்து கிடைக்கட்டும் என ராதிகா சொல்கிறார்.
இனியா எழில் வீட்டில் இருக்க செல்வி வருகிறார். பசங்க எல்லாரும் வீட்டில் இருக்காங்க என செல்வி சொல்ல, அவர்களும் தீபாவளி ட்ரெஸ்ஸில் போட்டோ எடுக்கின்றனர். எழில் அமிர்தா வீட்டிற்கு சென்று அவர்களை கூட்டிக் கொண்டு வரவா என பாக்கியாவிடம் கேட்க, இது என்ன கேள்வி எல்லாரையும் கூட்டிக் கொண்டு வா என பாக்கியா சொல்கிறார். பின் எழில் கிளம்ப ஜெனி செழியன் சந்தோசமாக வெடி வெடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனி அம்மா அப்பா வருகிறார்கள். அவர்கள் ஜெனி சந்தோசமாக இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார்கள்
உள்ளே வந்ததும் ஈஸ்வரியிடம் பேச அவர் கோவமாக இருக்கிறார். பின் பாக்கியா சாப்பிட ஸ்வீட்ஸ் கொடுக்க ஜெனி அம்மா நன்றாக சாப்பிடுகிறார். பின் தாத்தா பாட்டு பாடி சந்தோசமாக இருக்க ஈஸ்வரி கோவமாக இருக்கிறார். பாக்கியா நான் செய்த பலகாரம் எல்லாம் எல்லாம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள் என சொல்ல, அதை எல்லாம் எனக்கு செய்ய சொல்லிக் கொடுத்தது அத்தை தான் என பாக்கியா சொல்ல, அனைவரும் அதை கேட்டு சந்தோசப்படுகின்றனர்.