மாரடைப்பு காரணமாக முன்னணி நடன இயக்குனர் சிவசங்கர் திடீர் மரணம் – பிரபலங்கள் இரங்கல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (நவ.28) காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மறைவு
தென் இந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக பணியாற்றி வந்த சிவசங்கர் என்பவர் மாரடைப்பு காரணமாக தற்போது காலமாகி உள்ளார். தமிழில் வெளியான ‘திருடா திருடி’ என்ற திரைப்படத்தில் மன்மத ராசா என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவசங்கர். இதை தொடர்ந்து கிட்டத்தட்ட 800 மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில திரைப்படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ நடிகர் அருணின் புதிய கெட்அப் – சீரியல் முடிவுக்கு வருகிறதா? ரசிகர்கள் ஷாக்!
தவிர நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் சிவசங்கர். தொடர்ந்து ‘மகதீரா’ திரைப்படத்தின் சிறந்த நடனத்துக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் இவர். தற்போது 72 வயதான சிவசங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் சிவசங்கரின் மனைவி மற்றும் மகன் இருவரும் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களும் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சிவசங்கருக்கு நேற்று (நவ.28) உடல்நிலை சற்று மோசமானது. தொடர்ந்து, ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று இவரது உயிர் பிரிந்தது. தற்போது அன்னாரது இந்த திடீர் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.