விஜய் டிவியில் புதிதாக அறிமுகமாகும் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் ‘சிப்பிக்குள் முத்து’ என்ற பெயரில் அக்கா, தங்கை பாசத்தை மையமாக வைத்து புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோ தற்சமயம் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
சிப்பிக்குள் முத்து
சமீப காலமாக தமிழ் சின்னத்திரையில் நாம் ஏகப்பட்ட புதிய சீரியல்களின் அணிவகுப்பை கண்டு வருகிறோம். இதற்கு முன்னதாக ஒரு சீரியல் புதிதாக ஒளிபரப்பாகிறது என்றால் அது கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வரைக்கும் 1000 எபிசோடுகளை கடந்தவுடன் தான் முடிவடைவது உண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஒரு சீரியல் 300 எபிசோடுகளை தாண்டுவதே பெரிய சாதனையாக இருக்கிறது. இதனால் அவ்வப்போது டிவி சேனல்களில் புதிய சீரியல்களின் அறிமுகத்தை நம்மால் காண முடிகிறது. பொதுவாக தமிழ் ஆடியன்ஸ்களை கவருவதற்கு சீரியல் அல்லது சினிமா கதைகள் எல்லாம் ஏதாவதொரு சென்ட்டிமெண்ட்டை அடிப்படையாக கொண்டே எடுக்கப்படுவது வழக்கம்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அருண் யார் தெரியுமா? ரசிகர்கள் அறியாத புதிய தகவல்கள்!
இதை கவனித்து பார்த்தால் கிட்டத்தட்ட அனைத்து சீரியல்களிலுமே அப்பா, அம்மா, தம்பி, தங்கை உள்ளிட்ட பல குடும்ப உறவுகளையும் அதில் உள்ள சென்ட்டிமெண்ட்களையும் பார்க்க முடியும். அந்த வகையில் இப்போது ஒரு அக்கா, தங்கை உறவை மையமாக வைத்து விஜய் டிவியில் புத்தம் புதியதொரு சீரியல் தாயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ‘சிப்பிக்குள் முத்து’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சீரியலில் ஒரு அக்கா தன் தங்கையின் காதலை நிறைவேற்றுவதற்காக தனது ஆசையை தியாகம் செய்து மனநலம் சரியில்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்.
இதனால் அந்த பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் குழப்பங்கள், சோகங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த ‘சிப்பிக்குள் முத்து’ என்ற சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஜீ தமிழின் ‘சூப்பர் குயீன்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் நடிகை லாவண்யா அக்காவாக நடிக்க, அவருக்கு தங்கையாக ஜீ தமிழின் ‘திருமதி ஹிட்லர்’ சீரியல் பிரபலம் ஒருவர் நடிக்க இருக்கிறார். அந்த வகையில் இந்த சீரியலும் ரசிகர்களின் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.