ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அம்மா, மகள் பாசப்போராட்டத்துடன் புதிய தொடர்!
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு தொடர் நிறைவடைந்த காரணத்தினால் தற்போது கன்னத்தில் முத்தமிட்டால் என்கிற தொடர் கடந்த திங்கட்கிழமையில் இருந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கன்னத்தில் முத்தமிட்டால்:
விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ் டிவி, ஜீ தமிழ் முதலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தையும் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும், சிறு குழந்தைகளில் இருந்து குடும்ப தலைவிகள் வரை பலரும் தொலைக்காட்சி தொடர்களை தான் விரும்பி பார்த்து வருகின்றனர். இவர்களின் விருப்பத்தை அறிந்துகொண்டு ஞாயிற்றுக்கிழமையில் கூட சீரியலை தான் ஒளிபரப்பி வருகின்றனர். மேலும், அடுத்தடுத்து தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
திடீரென மயங்கிய முல்லை, கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் – மகிழ்ச்சியில் கதிர்!
மேலும், விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ் டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சி சீரியல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த தொலைக்காட்சி சீரியல்கள் அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே படம் போட்டு காட்டுவதால் மட்டுமே அதிகமாக மக்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். ஜீ தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒரு சீரியல் முடிவடைந்ததால் தற்போது புதிதாக கன்னத்தில் முத்தமிட்டால் என்னும் சீரியலை கடந்த திங்கட்கிழமையில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றனர்.
Zee TV-யில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான துஜ்சே ஹை ராப்தா (Tujhse Hai Raabta) என்ற இந்தி தொலைக்காட்சி தொடரின் ரீமேக்கை தான் கன்னத்தில் முத்தமிட்டால் என்கிற தமிழ் தொடராக திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பி வருகின்றனர். அதாவது அம்மா மகளுக்கும் இடையே இருக்கும் பாச போராட்டங்களை தான் இந்த சீரியல் அழகாக எடுத்துக்காட்டி கொண்டிருக்கிறது. ஒளிபரப்பாகி இரண்டு நாள் தான் ஆகும் நிலையில் சீரியல் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதாக பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.