திடீரென மயங்கிய முல்லை, கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் – மகிழ்ச்சியில் கதிர்!
முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து தற்போது திடீரென முல்லை மயங்கி விழும்படியாகவும், குடும்பத்தினர்கள் பதறி முல்லையை மருத்துவமனையில் சேர்க்கும்படியாகவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் கூறிவிடுகிறார்.
நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!
மேலும், செயற்கை முறையில் வேண்டுமானால் சிகிச்சை எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் கூறுகிறார். ஆனால் செயற்கை முறையில் சிகிச்சை எடுக்க அதிகமாக செலவாகும் என்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் யோசிக்கின்றனர். தற்போதைக்கு குழந்தை தான் முக்கியம் என நினைத்து மூர்த்தி வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என கூறிவிடுகிறார். மூர்த்தி கூறியது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தாலும் முல்லைக்காக ஒப்புக்கொண்டனர்.
ஆனால் மீனா மட்டும் அனைவருக்கும் சொந்தமான வீட்டை எப்படி ஒருவருக்காக விட்டு கொடுக்க முடியும் என சொல்லி சண்டை போடுகிறார். இதற்கு பிறகும் முல்லை செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில் முல்லைக்கு திடீரேன தலை சுற்றி மயக்கம் போட்டு விழுகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் பதறி போய் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பிறகு மருத்துவர், முல்லை கர்ப்பமாக இருக்கும் செய்தியை குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார். கதிர் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.