தமிழக போக்குவரத்து துறையின் 3 புதிய திட்டங்கள் – அமைச்சர் அறிமுகம்!
தமிழக போக்குவரத்து துறை மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 3 புதிய திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் தொடங்கி வைத்தார்.
புதிய திட்டம்:
தமிழகத்தில் தற்போது மாநகர அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். அரசு அறிமுகப்படுத்திய மகளிருக்கு இலவச பயண திட்டத்திற்கு பிறகு அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு உதவும் வகையில் முன்பதிவு திட்டத்தை தொடங்கி வைத்தது.
மகளிருக்கான பிரத்யேக போர்ட்டல் அறிமுகம் – ஏப்.1ம் தேதி முதல் செயல்படும்!
இதன் வாயிலாக பயணிகள் இணையத்தில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து “சென்னை பஸ்” என்ற செயலி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பயணிகள் அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருக்கும் இடம், வந்தடையும் நேரம் ஆகியவற்றை எளிதாக அறிந்து கொள்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
மேற்கண்ட திட்டங்களை தொடர்ந்து தற்போது பயணிகள் துறை, புகார் தீர்வு உதவி எண், பொது இணையதள வசதி ஆகிய திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அத்துடன் பயணிகள் 1800 599 1500 என்ற இலவச எண் மூலம் போக்குவரத்து துறை தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download