மகளிருக்கான பிரத்யேக போர்ட்டல் அறிமுகம் – ஏப்.1ம் தேதி முதல் செயல்படும்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கான பிரத்யேக போர்ட்டல் ஒன்றை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மகளிருக்கான போர்ட்டல்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் CSIR-ASPIRE என்ற திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் நிதிகளுக்கான பிரத்யேக மகளிருக்கான போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி இத்திட்டத்தின் கீழ் வாழ்க்கை அறிவியல், இயற்பியல் அறிவியல், இரசாயன அறிவியல், பொறியியல் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள மானியத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் அதிகரிக்கும் மின் தேவை – வரும் நாட்களில் மின்தடைக்கு வாய்ப்பு.. வெளியான ஷாக் நியூஸ்!
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருக்கும் பெண் விஞ்ஞானிகள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் JRF/SRF/RA உள்ளிட்ட ஊழியர்கள் உபகரணங்களை வாங்குவதற்கான நிதிகளுக்காக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் நிதிகளை ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பிரத்யேக போர்ட்டல் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.