Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – லட்சங்களை அள்ளித்தரும் திட்டம்!
இந்திய தபால் துறையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் என்கிற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 6.8 சதவீதம் வரைக்கும் வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தின் மூலமாக எவ்வளவு லாபம் சம்பாதிக்கலாம் என்பது குறித்தான அனைத்து விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்:
இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்காக பல சிறப்பான நலத் திட்டங்களை செய்துகொண்டிருக்கிறது. மக்கள் வங்கியில் பணம் சேர்ப்பதை விட இதுபோன்று அஞ்சல் துறை திட்டங்களில் இணைந்து பணம் சேமிப்பதை தான் பாதுகாப்பானதாக உணருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்திய அஞ்சல் துறையில் கூடுதலாக சில நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு திட்டங்களோடு சேர்த்து பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முடிவுகள் வெளியீடு!
அதாவது, இந்திய தபால் துறையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் என்கிற ஒரு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இத்திட்டத்திற்கு 6.8 சதவீதம் வரைக்கும் வட்டிவிகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இணைந்த வாடிக்கையாளர்கள் 1 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் நிகழ்வு காலம் 5 ஆண்டுகளாகும். போஸ்ட் ஆபீஸ்ஸின் இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு வெறும் 100 ரூபாய் செலுத்தியே கணக்கை தொடங்கலாம்.
Exams Daily Mobile App Download
மேலும், ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் வரைக்கும் சேமித்து வைத்திருந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1.38 லட்சம் வரைக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் 14.4 லட்சம் வரைக்கும் முதலீடு செய்திருந்தால் ரூபாய் 21 லட்சம் வரைக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் அனைத்துமே பாதுகாப்பானவை என்பதால் விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தேசிய சேமிப்பு சான்றுகள் திட்டத்தில் இணைந்து லாபத்தைப் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு 14 லட்சங்கள் வரைக்கும் முதலீடு செய்தால் கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய் வரைக்கும் லாபத்தை சம்பாதிக்கலாம். இந்திய தபால் துறையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மட்டுமல்லாமல் இதுபோன்ற எக்கச்சக்கமான நலத் திட்டங்களும் நடைமுறையில் இருக்கிறது.