அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள்!
அரசு வழங்கும் இலவச ரேஷனை சில தகுதியற்ற நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் சில விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகளின் படி, இலவச ரேஷன் பெறும் தகுதி இல்லாதவர்கள், தங்கள் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளது.
புதிய விதிமுறைகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பிரச்சினையின் போது கடந்த 2020ம் ஆண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சிரமப்படக் கூடாது என்று மத்திய அரசு ஏழை குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு கூடுதல் உணவு தானியங்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கியது. இத்திட்டம் வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இருந்தே வேலை (WFH) பார்க்கும் ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – CEO திட்டம்!
இந்த திட்டத்தின் கீழ் இலவச ரேஷனை பெற தகுதி இல்லாத பல லட்சம் பேர் பயன் பெற்று வருவதாக அரசின் கவனத்துக்கு புகார் வந்தது. இதனால் தகுதியுடையவர்களுக்கு உதவி கிடைக்காமல் போகிறது. இவ்வாறு தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வீணாக்குவதை விட அவர்களே தங்களுடைய ரேஷன் கார்டை ரத்து செய்து விட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் ஃபிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம்/டிராக்டர், ஆயுத உரிமம், குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் அத்தகையவர்களுக்கு ரேஷன் பெற தகுதி இல்லை.
Exams Daily Mobile App Download
புதிய விதிகளின்படி, அவர்கள் தங்களது ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காமல் இருந்தால், சரிபார்ப்புக்குப் பிறகு உணவுத் துறை குழு அதை ரத்து செய்து விடும். மேலும் அந்த குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும், அதுமட்டுமின்றி வாங்கிய ரேஷன் பொருட்களும் மீட்கப்படும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.