தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!
தமிழக அரசு சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் கை ரேகை மூலமாக பொருள்கள் வாங்குவதில் ஏற்படும் சிக்கல்களை தடுக்க உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிய நடைமுறை ஒன்று அமலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடை புகார்கள்:
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 803 அங்கீகரிக்கப்பட்ட ரேஷன் அட்டைகள் இருக்கின்றனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ரேஷன் அட்டைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் அடிப்படைத் தேவையான உணவுப் பொருள்களில் இருந்து, மானியம், அரசு நிதி என ரேஷன் அட்டை மூலமாகவே அரசு வழங்குகிறது. நாட்டின் முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டைகள் இருக்கிறது. மேலும் தற்போது பல மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு மே 2 வரை விடுமுறை அறிவிப்பு – கோடை வெப்பம் எதிரொலி!
அதன் மூலம் மக்கள் எந்த கடையிலும் பொருள்களை வாங்கி கொள்ளலாம். ஆனால் ரேஷன் அட்டைகள் வைத்திருக்கும் பலருக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவதில்லை. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஆதார் அட்டைகள் ரேஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய கை ரேகையை வைத்து ரேஷன் பொருள்களை பெற்று செல்லலாம். ஆனால் அதில் சில சிக்கல் எழுந்துள்ளது.
அதற்கு தீர்வு காணும் விதமாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பிரதிநிதிகளை நியமிப்பதற்கான படிவங்கள் ரேஷன் கடைகளிலும், உணவுத்துறையின் பிரத்யேக இணையதளத்திலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். தேவைப்படுவோர் அதை விண்ணப்பித்து பிரதிநிதிகளை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் 98.3 சதவிகித அட்டைகளுக்கு கை ரேகை மூலமாக பொருள்கள் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கண் கரு விழி சரி பார்ப்பின் மூலம் செயல்படுத்தும் நடைமுறை இருக்கிறது. அதே போல தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் இரண்டு இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.