பள்ளி, கல்லூரிகளுக்கு மே 2 வரை விடுமுறை அறிவிப்பு – கோடை வெப்பம் எதிரொலி!
தற்போது நிலவும் வெப்பச்சலனம் காரணமாக ஒடிசாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஏப்ரல் 27 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளி விடுமுறை
ஒடிசா மாநிலத்தில் நிலவும் வெப்பமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று (ஏப்ரல்.27) முதல் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் வகுப்பறை கற்பித்தலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சாஸ்வத் மிஸ்ரா வெளியிட்டுள்ள கடிதத்தில், ஒடிசா மாநில உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் வகுப்பறை கற்பித்தல் ஏப்ரல் 27 முதல் மே 2 வரை இடைநிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், தேர்வு, மதிப்பீடு, நிர்வாகப் பணிகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் போன்ற பிற செயல்பாடுகள் வழக்கம் போல் தொடரும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட விடுமுறைக் காலத்தில் தேர்வு, நிர்வாகம் மற்றும் இதர செயல்பாடுகளைச் செய்ய வழக்கமான வேலை நாள் போல அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!
முன்னதாக, கொரோனா தொற்றுநோயால் இழந்த கல்வி நாட்களை ஈடுகட்ட ஜூன் 1 முதல் ஜூன் 16 வரையுள்ள குறுகிய காலத்திற்கு கல்லூரிகள் மற்றும் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறையை மாநில அரசு அறிவித்தது. இது தவிர பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நேற்று (ஏப்ரல்.26) முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை மாநில அரசு மூடியுள்ளது. இப்போது ஒடிசாவில் குறைந்தபட்சம் 27 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.