அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிகள் அமல்? முழு விவரம் இதோ!
மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் தகவலின் படி, நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு வசதியாக புதிய விதிகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
புதிய விதிகள்
சமீபத்தில் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைவருக்கும் இலவச ரேஷன் திட்டத்தின் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், உணவு மற்றும் பொது விநியோகத் துறையும் ரேஷன் கார்டுதாரர்களுக்கான விதிகள் மற்றும் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இப்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கான தகுதி குறித்து நிலையான விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசாங்கம் இப்போது அதை மாற்றுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கூற்றுப்படி, தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அவர்களில் பொருளாதார ரீதியாக வளமான பலர் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு பொது விநியோக அமைச்சகம் தரநிலைகளில் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உணவு மற்றும் பொது விநியோகத் துறை கூறுகையில், ‘தரத்தில் மாற்றம் செய்வது குறித்து, மாநிலங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளை இணைத்து, அதற்கான புதிய தரநிலைகள் தயாரிக்கப்படுகின்றன. புதிய தரநிலை அமலுக்கு வந்த பிறகு தகுதியுடையவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள்.
தகுதியில்லாதவர்கள் பயன்பெற முடியாது. ரேஷன் தேவைப்படுபவர்களை மனதில் வைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கூற்றுப்படி, இதுவரை 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பயனாளிகள் அதாவது NFSA இன் கீழ் வரும் மக்கள் தொகையில் 86 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடி பேர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று ONORC திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.