சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 39,576 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மேலும் 320 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தாய்மார்கள் மற்றும் நகைப்பிரியர்கள் நகை வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் வாங்கும் சம்பளத்தின் பாதியை பெரும்பாலும் தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் புத்திசாலித்தனமான திட்டமாகவும் எண்ணுகின்றனர். இந்த கொரோனா கால கட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்துவிட்டது.
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை 40 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் பங்கு சந்தை நிலவரம் மிகவும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,576 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,956 க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.39,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,987க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை நேற்று ரூ.72.90 க்கு விற்பனையான நிலையில் ரூ.70.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.