TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இன்று (ஏப்ரல் 13) மாலை 5 மணி வரை விண்ணப்ப பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.எட்., படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வராத சூழலில் உள்ளதால், அவர்கள் ‘போனபைடு’ என்ற உறுதி சான்றிதழ் பயன்படுத்தி விண்ணப்பிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு டெட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் டெட் (TET) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால், அது வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்க சான்றிதழாக வழங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின்னர் அரசு தேர்வுகள் குறித்த அறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஈட்டிய விடுப்பை பணமாக மாற்ற மீண்டும் தடை!
இருப்பினும் தற்போது நோய் பரவல் கட்டுக்குள் வந்து உள்ளதால், அதை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வு மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் இளைஞர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதையடுத்து ஆசிரியர் பணி தேர்வுக்காக காத்து கொண்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ‘TET’ ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை மார்ச் 7ல், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி வெளியிட்டது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5 மணி வரை( ஏப்ரல் 13) கால அவகாசம் முடிவடைகிறது.
இந்த தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் பி.எட்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். பி.எட் படிப்பில் இறுதியாண்டு தேர்வு எழுதியுள்ளவர்கள், தங்கள் கல்லுாரிகளில், ‘போனபைடு’ என்ற உறுதி சான்றிதழ் பெற்று, அதை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் சலுகை அளித்துள்ளது. அதேபோல், டி.எல்.எட் என்ற தொடக்க கல்வி டிப்ளமோ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், போனபைடு சான்றிதழை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போன்றவற்றை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது