அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த புதிய விதிகள் – அதிரடி அறிவிப்பு!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்பது அரசு ஊழியர்களில் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை ராஜஸ்தான் அரசு தற்போது திருத்துகிறது.
புதிய விதிகள்:
2022-23ஆம் ஆண்டுக்கான ராஜஸ்தான் மாநில பட்ஜெட் உரையின்போது அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் அம்ல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ராஜஸ்தானில் அமல்படுத்தப்பட்டது. மேலும் ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீட்டெடுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக ராஜஸ்தானில் சிவில் சர்வீசஸ் விதிகள் விரைவில் திருத்தப்படும் மற்றும் மாநில அமைச்சரவை தேவையான திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள்1996, ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் (பங்களிப்பு ஓய்வூதியம்) விதிகள் 2005, பல்வேறு திருத்தப்பட்ட ஊதிய விகித விதிகள் மற்றும் ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் (மருத்துவ வருகை) விதிகள், 2013 ஆகியவற்றில் பல்வேறு திருத்தங்களுக்கான முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த முடிவின் மூலம், ஜனவரி 1, 2004 அன்று மற்றும் அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஓய்வூதியப் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் மற்றும் ராஜஸ்தான் அரசு சுகாதாரத் திட்டத்தின் (RGHS) கீழ் பணமில்லா மருத்துவ வசதியைப் பெற முடியும். ஒரே மாதிரியான தகுதிகள் தேவைப்படும் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை எளிதாக்குவதற்காக, பல ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்குப் பதிலாக ஒரு பொதுவான தகுதித் தேர்வு மாநிலத்தில் நடத்தப்படும். மாநில அமைச்சரவையின் முடிவின்படி, கிராம வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.