தமிழகத்தில் இனி ஆன்லைன் மூலம் கட்டிடம் கட்ட அனுமதி – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் கட்டிடம் கட்ட அனுமதி பெற வேண்டிய மக்கள் இனி நேரில் வரத் தேவையில்லை இணையதளம் வாயிலாக அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து மே 1ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
கட்டிட அனுமதி:
இன்றைய கால கட்டத்தில் அனைத்து வேலைகளும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்று அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மக்கள் முற்றிலும் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்தனர். தொற்று அச்சம் காரணமாக பொருட்கள் வாங்குவது முதல் அலுவலக வேலைகள் வரை அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வாயிலாகவே செய்து வந்தனர். மற்ற வேலைகளை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வேண்டுபவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஊதிய உயர்விற்கான புதிய சூத்திரம்!
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருப்பதால் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இது போன்ற நிகழ்வுகளை தடுக்க ஒற்றைச்சாளர முறையில் அதுவும் தானியங்கி முறையில் கட்டிட அனுமதியை பெறும் முறை வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் அமலாக்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து முதல் கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளிலும் ஒற்றைச்சாளர திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மே 1 ஆம் தேதி முதல் கட்டடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தால் போதுமானது, நேரில் வரத் தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இனி மக்கள் சிரமமின்றி வீட்டிலிருந்தபடியே கட்டிடம் கட்ட அனுமதி பெறலாம்.