ஓய்வு காலத்திற்கு முன்னதாக PF பணத்தை எடுக்க விதிகள் & நிபந்தனைகள் என்ன? முழு விவரம் இதோ!

0
ஓய்வு காலத்திற்கு முன்னதாக PF பணத்தை எடுக்க விதிகள் & நிபந்தனைகள் என்ன? முழு விவரம் இதோ!
ஓய்வு காலத்திற்கு முன்னதாக PF பணத்தை எடுக்க விதிகள் & நிபந்தனைகள் என்ன? முழு விவரம் இதோ!
ஓய்வு காலத்திற்கு முன்னதாக PF பணத்தை எடுக்க விதிகள் & நிபந்தனைகள் என்ன? முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களில் பிஎஃப் எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி வைத்திருப்போருக்கு அவர்களது ஓய்வு காலத்திற்கு முன்னதாகவே பிஎஃப் தொகையை எடுக்க விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

PF முக்கிய அறிவிப்பு:

நாடு முழுவதும் உள்ள மாத சம்பளம் வாங்கும் அனைத்து தொழிலாளர்களும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக சேர்ந்த பின்னர், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து மாதம்தோறும் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அந்த தொகையை ஊழியர்களின் ஓய்வு காலத்திற்கு பின் வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். இது ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்படுகிறது.

தமிழகத்தில் இனி ஆன்லைன் மூலம் கட்டிடம் கட்ட அனுமதி – அரசு அறிவிப்பு!

இந்த தொகையானது பொதுவாக ஓய்வூதியத்திற்கு பின் பயன்படும் தொகையாகவே இருக்கிறது. ஓய்வு காலத்திற்கு முன்னதாக இந்த தொகையை யாரும் எடுக்க நினைப்பதில்லை. ஆனால் ஊழியர்களுக்கு சில சூழ்நிலையால் அந்த பணம் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. பணி ஓய்வுக்கு முன் பிஎஃப்-லிருந்து பணத்தை எடுக்க சில வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரசாங்கம் இது தொடர்பாக மக்களுக்கு மேலும் சில நிவாரணங்களை வழங்கி இருக்கிறது.

புதிய விதிகளின்படி, ஊழியர்கள் தங்களது அடிப்படை ஊதியத்தில் 75 சதவீதம் அல்லது பிஎஃப் கணக்கில் 3 மாதங்களுக்கு நிகர இருப்புத் தொகையை எடுக்கலாம். இதற்கு, நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதன் செயல்முறை 3 வணிக நாட்களில் நிறைவுசெய்யப்படும். இது தவிர, வீட்டுக் கடனுக்காகவும் பி.எஃப்-ல் இருந்து பணத்தை எடுக்கலாம். இதற்கு 60 மாதங்கள் கண்டிப்பாக நீங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வேலை இல்லாவிட்டாலும் பிஎஃப்-ல் இருந்து பணத்தை எடுக்கலாம். குழந்தைகள் மற்றும் உடன்பிறந்தவர்களின் திருமணம் அல்லது 10ஆம் வகுப்புக்குப் பிறகு குழந்தைகளின் கல்விக்காகவும் பிஎஃப் பணத்தை எடுக்கலாம். இருப்பினும், நீங்கள் 84 மாதங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே இந்தக் கோரிக்கை செல்லுபடியாகும். மேலும், ஒருவர் ஓய்வுபெறும் ஓராண்டுக்கு முன் பிஎஃப் தொகையில் 90 சதவீதத்தை எடுத்துக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!