LPG சிலிண்டர் விலை முதல் வங்கி சேவை வரை புதிய மாற்றங்கள் – ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

0
LPG சிலிண்டர் விலை முதல் வங்கி சேவை வரை புதிய மாற்றங்கள் - ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!
LPG சிலிண்டர் விலை முதல் வங்கி சேவை வரை புதிய மாற்றங்கள் - ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!
LPG சிலிண்டர் விலை முதல் வங்கி சேவை வரை புதிய மாற்றங்கள் – ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் ஜூன் மாதத்தில் சமையல் சிலிண்டர் கேஸ், தங்க நகைகள், சேமிப்பு கணக்கு திட்டங்கள், காப்பீடு ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

புதிய மாற்றம்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வடைந்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் பாடு பட்டு வந்தனர். இதற்கிடையில் இந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் ஜூன் 1 முதல் சமையல் சிலிண்டர் துவங்கி வங்கி சேவை வரையுள்ள சிலவற்றில் மாற்றங்கள் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு மாத துவக்கத்திலும் நிர்ணயிக்கப்படும் சமையல் சிலிண்டர் விலை வரும் ஜூன் 1 முதல் மீண்டும் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

அதாவது, கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாதத்திலும் விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தங்க நகைகளுக்கான புதிய விதிமுறைகளின் படி, அனைத்து நகைகளும் ஹால்மார்க் முத்திரையுடன் வர இருக்கிறது. இது குறித்த மத்திய அரசின் உத்தரவுப்படி, ஜூன் 1 முதல் ஹால்மார்கிங் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் ஆகிய மூன்று தரங்களில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Exams Daily Mobile App Download

தொடர்ந்து தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கு 2 புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் கீழ், ஜூன் 1 முதல் கணக்குதாரர்கள் இனி மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு மின்னணு முறையில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். அதே போல ஜூன் முதல் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை வசதிகளையும் பயன்படுத்த முடியும். தொடர்ந்து மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியமும் அதிகரிக்க உள்ளது. அந்த வகையில் 150 ccக்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15% உயர இருக்கிறது. இதனுடன், 1000 cc முதல் 1500 cc வரையிலான கார்களுக்கு 6% பிரீமியத் தொகை அதிகரிக்க உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!