TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழகத்தில் தற்போது TNPSCயின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழித்தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளி தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேர்வணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுகள் அரசு பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் அதற்குரிய பணியிடத்தில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – eKYC செயல்முறையை முடிக்க மே 31 கடைசி நாள்!
அதன்படி தற்போது அறிவித்தபடி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ்மொழித்தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் எழுத, செவித்திறன் குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்கள் தாங்கள் பள்ளி முதல் கல்லூரி படிப்பில் முழுவதுமாக ஆங்கில வழியில் படித்துள்ளதால் அவர்கள் இந்த தமிழ்மொழித்தகுதி தேர்வுக்கு படிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். அத்துடன் அவர்களால் இரு மொழிகளை படிக்க மிகவும் கடினமாக உள்ளது. அதனால் தமிழ்மொழித்தகுதி தேர்வு எழுத இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட தேர்வாணையம் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2, 2ஏ உள்ளிட்ட தேர்வுகளில் இருந்து முதன்மை தேர்வில் உள்ள தமிழ்மொழித்தகுதி தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 3, குரூப் 4, குரூப் 7B, குரூப் 8 உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ்மொழி தகுதி தேர்வு மதிப்பீடு தேர்வாக இருப்பதால் தேர்வர்களுக்கு ஆங்கில வழியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு தனியாக ஆங்கில மொழித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.