IPPB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜன.1 முதல் புதிய விதிமுறை அமல்!

0
IPPB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜன.1 முதல் புதிய விதிமுறை அமல்!
IPPB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜன.1 முதல் புதிய விதிமுறை அமல்!
IPPB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜன.1 முதல் புதிய விதிமுறை அமல்!

வங்கி கணக்கில் ரூ.10000-க்கு மேல் பணம் செலுத்தினாலும் எடுத்தாலும் சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிவித்துள்ளது. இதனை கூடிய விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேவை கட்டணங்கள்

இந்தியாவில் இந்திய தபால் துறையால் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பட்டு கொண்டு வருகிறது. இவ்வங்கியானது ‘வீட்டின் வாசல் படியில் வங்கி சேவை’ என்ற நோக்கத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு கொண்டு வருகிறது. இது வணிக கணக்கு மற்றும் 3 வகையான சேமிப்பு கணக்குகளை கொண்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட வகை வங்கி கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புக்கு மேல் பணம் செலுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

பேசிக் சேவிங்க்ஸ் என்ற வகையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணம் வரவு வைக்க உச்ச வரம்பு எதுவும் கிடையாது. பேசிக் சேவிங்க்ஸ் தவிர்த்து மற்ற சேமிப்பு கணக்குகளில் அதிகபட்ச வைப்பு தொகையான 10,000 ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஒரு பரிவர்த்தனைக்கு 0.50% அல்லது ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே போல் சேமிப்பு மற்றும் வணிக கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக 25,000 ரூபாய் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜன.1, 2 ஆகிய தேதிகளில் புத்தாண்டு விடுமுறை – அரசு அறிவிப்பு!

மேலும் 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.50% அல்லது ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பேசிக் சேவிங்க்ஸ் அல்லாத பிற வகை கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு முதல் நான்கு முறை சேவை கட்டணங்கள் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.50% அல்லது 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனையும் வருகிற ஜனவரி மாதம் 1ம் ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!