தமிழகத்தில் நாளை (டிச.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாளை (22.12.2021) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள் தனக்கென தனித்துவமான பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குன்னூரில் உள்ள ஜெகதளா கிராமத்தில் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே விரதம் இருந்து சுவாமி வழிபாடு செய்வர்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜன.1, 2 ஆகிய தேதிகளில் புத்தாண்டு விடுமுறை – அரசு அறிவிப்பு!
மேலும் இந்த ஹெத்தையம்மன் கோயில் திருவிழா நீலகிரியில் உள்ள கோத்தகிரி பழமை வாய்ந்த பேரகணி, பெத்தாளா, ஒன்னதலை, கூக்கல், சின்ன குன்னுார், எப்பநாடு மற்றும் பெப்பேன் ஆகிய கிராமங்களில் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இப்பண்டிகையின் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேறும் விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்னதானமும் நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக எளிமையாக திருவிழா நடைபெற்றது.
இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு – மத்திய அமைச்சர் மசோதா தாக்கல்!
நடப்பு ஆண்டும் ஹெத்தையம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான நாளை ஹெத்தையம்மன் உலா நடைபெறவுள்ளது. அதனால் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசின் அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2022 ஜனவரி மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.