கணவர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட ‘செம்பருத்தி’ ஷபானா – குவியும் வாழ்த்துக்கள்!

0
கணவர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட 'செம்பருத்தி' ஷபானா - குவியும் வாழ்த்துக்கள்!
கணவர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட 'செம்பருத்தி' ஷபானா - குவியும் வாழ்த்துக்கள்!
கணவர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட ‘செம்பருத்தி’ ஷபானா – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வரும் ஆர்யனும் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஷாபனாவும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீப காலமாக அவர்களை சுற்றி பல வதந்திகள் பரவி வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஷபானா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஷபானாவின் பதிவு:

சின்னத்திரையில் நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான். இவர்கள் பொதுவாக ஒரே சீரியலில், ஒரே நிகழ்ச்சியில் அல்லது ஒரே சேனலில் பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். ஆனால் அப்படி இதுவரையிலும், ஒன்றாக சேர்ந்து பணியாற்றாத இரண்டு பிரபலங்கள் காதலிப்பதாக வெளியான தகவலை அறிந்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். அது விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வரும் ஆர்யனும், ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் பார்வதியாக நடித்து வரும் ஷபானாவும் தான். இவர்கள் காதலிக்கும் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், சில மாதங்களிலேயே திருமண செய்தி பற்றி கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் தலை தூக்கும் பாத்ரூம் பிரச்சனை – ரசிகர்கள் விமர்சனம்!

அதிலும் திருமணத்தன்று தான் ஷபானா தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் அறிவித்தார். இவர்களின் திருமண கலாட்டாக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு மிகவும் வைரலாகியது. ஷபானா மற்றும் ஆர்யன் ஜோடியின் ரசிகர்கள் இவர்கள் திருமணத்தை கொண்டாட தொடங்கினார்கள். திருமணத்திற்கு பிறகு, தங்களின் ஒவ்வொரு சிறப்பான தருணங்களையும் இருவரும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், தான் கடந்த சில நாட்களாக ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் பிரிந்து விடப்போவதாக பல வதந்திகள் வரத் தொடங்கியது.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினியின் சின்னத்திரை டூ சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆனால் இவர்கள் கண்டுகொள்ளவில்லை. தனியார் சேனலிடம் பேசிய ஆர்யன் தாங்கள் சந்தோசமாக இருப்பதாக கூறினார். ஆனாலும் வதந்திகள் ஓயவில்லை. இந்நிலையில் ஷபானா தனது இன்ஸ்டாவில் தற்போது ஒரு போட்டோவை ஸ்டோரியாக பதிவு செய்துள்ளார். தனது கணவருடன் சேர்ந்து வெளியில் சென்றிருக்கும் போது, கணவர் எடுத்த புகைப்படம் தான் அது என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ஆர்யனையும் டேக் செய்துள்ளார். தங்களை சுற்றி வரும் வதந்திகளுக்கான பதிலாக ஷபானா இந்த போட்டோவை வெளியிட்டிருப்பது குறித்து பாராட்டுகளையும், இவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!