வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்! அரசு நடவடிக்கை!!
ஓமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இஸ்ரேலில் தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடை முடிந்த நிலையில் கூடுதலான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்:
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ நவ.24 தேதி அன்று கண்டறியப்பட்டது. மேலும் இது 10 மடங்கு மிகவும் வேகமாக பரவ கூடியதாக உள்ளது. இந்த புதிய வகை வைரஸ் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசில் உதவித்தொகையுடன் வேலை 2021 – 8வது தேர்ச்சி
இந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. இதே போல் இஸ்ரேலில் ஓமைக்ரான் பரவல் காரணமாக தனது எல்லையை மூடியது. அதாவது வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதித்துள்ளது. தற்போது இந்த தடை முடிந்த நிலையில் மேலும் 10 நாட்கள் அதாவது வருகிற டிச.22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தன் நாட்டு மக்களுக்கும் பயணக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
அதன்படி வெளிநாட்டில் இருந்து இஸ்ரேல் திரும்பும் சொந்த நாட்டு மக்கள் முறையாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் அதன் முடிவுகள் வெளிவரும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஒமைக்ரான் பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் இஸ்ரேல் நாட்டு மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ள ஓட்டலில் தான் இருக்க வேண்டும் என்றும் கடுமையாக அறிவித்துள்ளது. இதுவரை இங்கு 21 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்றுக்கு நேற்று வரை 8210 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.