கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க இருக்கிறது.
ரேஷன் கார்டு
கர்நாடக மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டு பெற பல விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்படும் என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக முன்னுரிமை ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன . எனவே புதிய முன்னுரிமை ரேஷன் கார்டு பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இரண்டு லட்சத்து 95 ஆயிரத்து 986 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் மார்ச் 31ஆம் தேதிக்குள் அந்த விண்ணப்பங்கள் பரிசுகளை செய்யப்பட்டு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமை ரேஷன் கார்டுகள் பெற கர்நாடகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். ரேஷன் கார்டுகள் குடும்பத்தின் வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்கப்படும். https://ahara.kar.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.