டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரின் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
காவல் நீட்டிப்பு:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏழு நாள் காவல் முடிந்துள்ள நிலையில் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றத்திற்கு வரும்போது செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது மிகப்பெரிய சதி செயல்.
அமலாக்க துறையின் செயலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார். இதன் பிறகு நடந்த நீதிமன்ற விசாரணையின் போது அமலாக்கத்துறையானது கெஜ்ரிவாலின் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் நீதிமன்றம் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 5 நாட்கள் கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்து அனுமதி அளித்துள்ளது.