அக்.1 முதல் புதிய கட்டண விதிமுறைகள் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
அக்.1 முதல் புதிய கட்டண விதிமுறைகள் - வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அக்.1 முதல் புதிய கட்டண விதிமுறைகள் - வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அக்.1 முதல் புதிய கட்டண விதிமுறைகள் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவிப்பின் படி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தானியங்கி செயல்பாடுகள் மூலம் பண பரிமாற்றம் செய்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கட்டண விதிமுறைகள்

வீட்டுக் கடன்களுக்கான EMI அல்லது உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து அடிக்கடி மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு தானியங்கி செயல்முறைகளை மேற்கொள்பவராக இருந்தால், இனி அதை நீங்கள் முறையாக கையாளவேண்டிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கார்டு அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு ஓர் நற்செய்தி – காப்புரிமை கட்டணத்தில் 80% குறைப்பு!

அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கிகள் பணம் செலுத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக டெபிட் குறித்த செய்தியை சம்பந்தட்ட வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அனுப்பினால் மட்டுமே இதுபோன்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்த முடியும். இல்லையென்றால் வங்கிகள், பரிவர்த்தனைகளை அனுமதிக்காது. மேலும், ரூ .5,000 க்கு மேல் தானியங்கி பணம் செலுத்துதல் முறையில் வாடிக்கையாளர்கள் ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. அந்த வகையில் HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய தனியார் வங்கி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுவதை தடுக்க மத்திய வங்கி உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் RBI பரிந்துரைத்த புதிய நிபந்தனைகளுக்கு அட்டை வழங்கும் வங்கிகள், அட்டை நெட்வொர்க்குகள் மற்றும் வணிகர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது என வங்கிகள் அறிவுறுத்தியுள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு!

RBI உத்தரவுக்கு இணங்க பொது இ-ஆணை தளத்துடன் ஒருங்கிணைக்க வங்கிகள் Razorpay மற்றும் BillDesk போன்ற கட்டணச் சேகரிப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றன. இதனுடன் ஆக்ஸிஸ் மற்றும் ICICI வங்கி வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியின் கட்டளைக்கு இணங்க அக்டோபர் 1ம் தேதிக்குள் இந்த சேவைகளை செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு RBI ன் புதிய விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்றால், இதுபோன்ற வழிமுறைகளை செயல்படுத்தும் வங்கிகள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ளும் என்று RBI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!