நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்து வருகிறது. இன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தங்க விலை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்து மற்றும் பயன்படுத்தி வருகின்றனர். தங்க விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அதிகமாகவே இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் நிறுத்தம் – பக்தர்கள் ஏமாற்றம்! சாலை மறியல்!
அதனால் மக்கள் வருத்தத்தில் இருந்தனர். தொடர்ந்து விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 21ம் தேதி சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,371க்கும், ஒரு சவரன் ரூ.34,968க்கும் விற்பனையானது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அரசின் முடிவு என்ன?
இதனையடுத்து, நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,064க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.34,856க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,357க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.90க்கு விற்பனையாகிறது. இதனால் தங்கநகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.