திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் நிறுத்தம் – பக்தர்கள் ஏமாற்றம்! சாலை மறியல்!
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு தடுப்பூசிகள் பயன்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வந்தது. இதனால் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்தது. ஆன்லைன் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை வழங்கியது. ஓவ்வொரு மாதமும் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்குகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அரசின் முடிவு என்ன?
கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான சூழலில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தினமும் 8,000 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக தினந்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க தேவஸ்தான அதிகாரிகள் அடுத்தடுத்த நாட்களுக்கான தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வந்தனர்.
தமிழகத்தில் அக்.1 முதல் அரசு AC பேருந்துகள் இயங்க அனுமதி – அமைச்சர் அறிவிப்பு!
ஆனாலும் கூட்டம் குறையவில்லை. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என்பதால் தேவஸ்தானம் டிக்கெட் விநியோகத்தை நிறுத்தி ஆன்லைன் மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும் படி அறிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத மக்கள் அந்த இடத்தை விட்டு கலையாமல், தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் உட்பட ஏராளமானோர் டிக்கெட் விற்பனையை நிறுத்தியதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.