கல்வி நிறுவனங்களுக்கு ஓர் நற்செய்தி – காப்புரிமை கட்டணத்தில் 80% குறைப்பு!
கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கட்டணத்தில் 80% குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காப்புரிமை கட்டண குறைப்பு:
இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்கும் விதமாக காப்புரிமை கட்டணத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களுக்கு குறைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது . காப்புரிமை என்பது தொழில்துறை சார்ந்து ஒருவர் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்பை பொதுமக்களிடம் வெளியிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால வரையறையோடு கண்டுபிடிப்பவருக்கு வழங்கும் உரிமம் தான்.
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு!
அத்தகைய கால இடைவெளி வரை கண்டுபிடித்தவர் அவரது கண்டுபிடிப்பினை அவருக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் கண்டுபிடிப்பு இதுவரையில் யாரும் கண்டுபிடிக்காத ஒன்றாக இருத்தல் அவசியம். அவ்வாறு இருந்தால் மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்படும். இத்தகைய காப்புரிமை பெறுவதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இதனை செலுத்தினால் மட்டுமே கண்டுபிடிப்புக்கான காப்புரிமை வழங்கப்படும்.
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் நிறுத்தம் – பக்தர்கள் ஏமாற்றம்! சாலை மறியல்!
அத்தகைய விண்ணப்ப கட்டணத்தை பல நிறுவனங்களுக்கு மத்திய அரசு குறைத்து வந்தது. தற்போது கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்தும் விதமாக கல்வி நிறுவனங்களுக்கும் காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்ப கட்டணத்தில் 80 விழுக்காடு குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.