தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – வெளியான புதிய உத்தரவு! கல்வித்துறை நடவடிக்கை!
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் இயங்கும் நேரம் குறித்து கல்வித்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வித்துறை உத்தரவு:
இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் மறு உருவமான ஓமைக்ரான் பரவலும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம்,டெல்லி, உத்தரபிரதேசம், மணிப்பூர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. அதனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் திட்டம் என்ன? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வந்ததால் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா 3 ஆம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வு இல்லாத 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அறிவித்தது. அதன்படி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.
பிப்ரவரி 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!
இந்நிலையில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்பு நடத்துவதாக புகார் வந்துள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளும் காலை, பிற்பகல் என்று முழு நேரமும் செயல்பட வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தடை இன்றி நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றுகையில் முழு நேரமும் பள்ளிகள் இயங்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு பாடத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கல்வித்துறை உத்தரவை மீறி பள்ளிகள் சுழற்சி முறையில் நடைபெற்றால் அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.