பிப்ரவரி 10 முதல் 1 – 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
பிப்ரவரி 10 முதல் 1 - 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 10 முதல் 1 - 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 10 முதல் 1 – 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ஹரியானா மாநிலத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பிப்ரவரி 10 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்புகளில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து ஹரியானா மாநிலத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2022 பிப்ரவரி 10 முதல் நேரடி வகுப்புகளை மீண்டும் துவங்க அரசு முடிவு செய்துள்ளது. ஹரியானாவில் கடந்த மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் திடீர் எழுச்சி காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – வெளியான புதிய உத்தரவு! கல்வித்துறை நடவடிக்கை!

இதற்கிடையில் வரவிருக்கும் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பள்ளிகளை படிப்படியாக மீண்டும் திறக்க முடிவு செய்த மாநில அரசு பிப்ரவரி 1 முதல் 10 முதல் 12 வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகளை திறந்தது. இதனை தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பிப்ரவரி 10 முதல் மீண்டும் வகுப்புகள் துவங்கும் என்று தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்து மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் கூறுகையில், ‘பிப்ரவரி 10 முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்காக மீண்டும் திறக்கப்படலாம்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் திட்டம் என்ன? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

அதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முறையான கொரோனா பாதுகாப்பு நெறிமுறையை பின்பற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையில் ஹரியானாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது, தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!