பிப்ரவரி 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!
தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து, கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா வைரஸின் 3ம் அலை கேரளாவில் அதிக அளவில் பாதிப்புகளை உண்டாக்கியது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இரவு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடும் அமலில் இருந்தது. இதனால் நோய் தொற்று பரவல் விகிதம் குறைந்து வரும் நிலையிலும் கடந்த ஞாயிற்று கிழமை பிப்ரவரி 6ம் தேதி அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது கொரோனா அலையின் பரவலைத் தணிக்க ஒரு நாள் முழு ஊரடங்கு காலத்திலும் அவசர சேவைகளை மட்டுமே இயக்க அனுமதித்தது. சோதனை நேர்மறை விகிதம் 28 சதவீதமாக குறைந்துள்ளது. கேரளாவில் திங்களன்று 22,524 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என அரசு கருதுகிறது. தினசரி கோவிட் -19 வழக்குகள் குறைந்து வருவதை அடுத்து, கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – குறைந்தபட்ச முதலீடு ரூ.250! சிறந்த வட்டி விகிதம்!
அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும், வகுப்புகள் மாலை வரை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்தும் முன்னதாக அரசு வெளியிட்டுள்ளது. தற்போது பிப்ரவரி 13ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று வார இறுதி முழு ஊரடங்கு அமலில் இருக்காது என்று அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.