சென்னையில் புதிய மெட்ரோ ரயில் சேவை – ஒப்பந்தத்தில் சிக்கல்! பணிகள் தாமதம்!

0
சென்னையில் புதிய மெட்ரோ ரயில் சேவை - ஒப்பந்தத்தில் சிக்கல்! பணிகள் தாமதம்!
சென்னையில் புதிய மெட்ரோ ரயில் சேவை - ஒப்பந்தத்தில் சிக்கல்! பணிகள் தாமதம்!
சென்னையில் புதிய மெட்ரோ ரயில் சேவை – ஒப்பந்தத்தில் சிக்கல்! பணிகள் தாமதம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக முக்கிய சாலைகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அதனால் பணிகள் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில்:

சென்னையில் தற்போது முக்கிய சாலைகளில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய மெட்ரோ ரயில் திட்டம் பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இத்திட்டப் பணிகளை 2026 ம் ஆண்டுக்குள் முடிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது ஆரம்பத்தில் ஆலந்துார் முதல் கோயம்பேடு வரை மட்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. பிறகு படிப்படியாக நீடிக்கப்பட்டு ரயில் பாதை மற்றும் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றது. ரயில் பாதை மற்றும் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் மாநில அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

Exams Daily Mobile App Download

அடுத்தாக இரண்டாம் கட்ட திட்டத்தில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை என மொத்தம் 118.9 கிலோமீட்டர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் வரும் 2025 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையில் டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள எந்தவொரு நிறுவனமும் முன்வராததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் நாட்டின் JICA நிறுவனத்தின் கட்டுப்பாடுகளால் கொளத்தூர் முதல் நாதமணி வரையிலான மெட்ரோ ரயில் பாதையை கட்டமைக்க யாரும் முன்வரவில்லை.

தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ் பெறாதோருக்கான அறிவிப்பு – முக்கிய தகவல்!

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்தவைகளாக இருக்கின்றன. இது தொடர்பாக பதிவு சான்றுகளையும் வைத்திருக்கின்றன. இதனால் JICA நிறுவனத்திடம் அனுமதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. Phase-2 திட்டப் பணிகள் 8 முதல் 9 மாதங்கள் வரை தாமதமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது மாதவரம் முதல் கெல்லீஸ் வரையிலும், கெல்லீஸ் முதல் தரமணி ரோடு ஜங்ஷன் வரையிலும் இரட்டை சுரங்கப்பாதை அமைப்பதற்கு ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பணிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!