தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ் பெறாதோருக்கான அறிவிப்பு – முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ் பெறாதோருக்கான அறிவிப்பு - முக்கிய தகவல்!
தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ் பெறாதோருக்கான அறிவிப்பு - முக்கிய தகவல்!
தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ் பெறாதோருக்கான அறிவிப்பு – முக்கிய தகவல்!

தமிழகத்தில், குழந்தை பிறந்து சுமார் 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்த பிறகும் பிறப்பு சான்றிதழை பெறாமல் இருப்பவர்களுக்கு மத்திய அரசாங்கம் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பிறப்பு சான்றிதழ்

ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் முதல் மற்றும் முக்கியமான அடையாள சான்று பிறப்பு சான்றிதழ். அந்த வகையில் ஒவ்வொரும் தங்களது பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறுவது கட்டாயமானதாகும். இந்த பிறப்பு சான்றிதழ்கள் பள்ளிகளில் சேருவது துவக்கி குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு, விசா ஆகியவற்றை பெறுவதற்காக தேவைப்படும் முக்கியமான ஆவணமாகும். அதனால் குழந்தை பிறந்த ஒரு ஆண்டுக்குள் இந்த சான்றிதழை பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

Exams Daily Mobile App Download

இப்போது ஒரு ஆண்டுக்கு பிறகு குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழை பெற வேண்டுமானால் அதற்காக காலதாமத கட்டணமாக ரூ.200 வரை செலுத்த வேண்டும். இது தவிர குழந்தை பிறந்த பிறகு 15 ஆண்டுகளுக்குள் அவர்களது பெயரை பதிவேட்டில் இணைக்க வேண்டும். இல்லை என்றால் அந்த பிறப்பு சான்றிதழ் செல்லுபடியாகாது என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் 1.1.2000ம் ஆண்டுக்கு முன் பிறந்த குழந்தைகள், 15 ஆண்டுகள் பூர்த்தியான பதிவுகள் ஆகியவற்றில் பெயர்களை பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக 10 & 12 ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இது தொடர்பாக இந்திய தலைமை பதிவாளரார் அளித்துள்ள தகவலின் படி, 31.12.2024 தேதிக்கு பிறகு குழந்தைகளின் பெயரை பதிவேட்டில் பதிவு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், கொடுக்கப்பட்ட இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி குழந்தைகளின் பெயர்களை வைத்து பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.200 மற்றும் காலதாமத கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!