அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு என குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் கருவி மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பரிசோதனை அடிப்படையில், கைரேகைக்கு பதிலாக கண் கருவிழி சரிபார்ப்பு முறை அமல்படுத்தப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
புதிய நடைமுறை:
தமிழகத்தில்,பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு கைரேகையை வைத்து பொருட்கள் வழங்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூ கார்டு ஸ்கேன் செய்யப்படும் போது அதில் காட்டப்படும் பெயர்களில் உள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு மிஷினில் விரல் வைத்து கைரேகை ஸ்கேன் செய்த பின் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் கைரேகை பதிவில் சிக்கல்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
NEET தேர்வெழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – 20 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்!
சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது, டி.ஆர்.பி.ராஜா ரேஷன் கடைகளில் கைரேகை வைத்து பொருட்கள் வாங்கும் நடைமுறை உள்ளது. முதியோர், விவசாயிகள் கைரேகை பதிவு வைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்தனர். அதை தவிர்க்க, நவீன முறை அறிமுகம் செய்யப்படுமா என கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள், உண்மையான பயனாளிகளுக்கு செல்வதை உறுதி செய்ய, பயனாளிகளின் ஆதார் எண் அடிப்படையில், விரல் ரேகை சரிபார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன
கைரேகை சரிபார்ப்பில் சிக்கலை சந்திக்கும் போது கையெழுத்து பெற்றும் பொருட்கள் வழங்கும்படி உத்தர விடப்பட்டிருக்கிறது. கண் கருவிழி சரி பார்க்கும் முறை கடைக்கு நேரடியாக வரமுடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கைரேகை முறையில் சிக்கல் இருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக நகரப்பகுதிகள், ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Exams Daily Mobile App Download
இது, 98.23 சதவீதம். கண் கருவிழி சரிபார்ப்பு முறை, மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் உட்பட சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இது, தமிழகத்தில் ஒரு ஊரகப் பகுதி மற்றும் ஒரு நகர பகுதியில், பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.தனி நபர் அடையாளம் உறுதி செய்யப்பட்டு, ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை சரியாக இருந்தால், இந்த திட்டத்தை செம்மையாக்கி, மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.