தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பல அரசு ஊழியர்கள் பயன் பெற்று வருகின்றனர். அன்மையில் அரசு ஊழியர்கள் சங்க சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழக பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி உள்ளது. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டமானது பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விரைவில் கலப்பு மருந்து!
இத்திட்டத்தில் காப்பீடு கட்டணமாக அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 300 பெறப்படுகிறது. மேலும், புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய் கட்டிகளில் நோய் தடுப்பாற்றல் சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை, விபத்து, இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற நிதி உச்சவரம்பு ரூ.10 லட்சம் ஆகும்.
TCS, Wipro, Cognizant நிறுவனத்தின் ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work from Home!
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் கடந்த 2 வருடங்களாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் சேவைக்காக எந்தவித அச்சமும் இல்லாமல் அரசுப்பணியாளர் வேலை பார்த்து வந்தனர். அந்த நிலையில் அரசுஊழியர்கள் தான் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்தனர். இதனால் அரசுஊழியர் சங்கம் சார்பில் கொரோனாவுக்கான சிகிச்சை செலவுகளை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு உயர் சிகிச்சைப் பிரிவில் கொரோனா தொற்று சிகிக்சை சேர்க்கப்பட்டு உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.