TCS, Wipro, Cognizant நிறுவனத்தின் ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work from Home!

0
TCS, Wipro, Cognizant நிறுவனத்தின் ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் Work from Home!
TCS, Wipro, Cognizant நிறுவனத்தின் ஊழியர்கள் கவனத்திற்கு - முடிவுக்கு வரும் Work from Home!
TCS, Wipro, Cognizant நிறுவனத்தின் ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் Work from Home!

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், விப்ரோ, காக்னிசன்ட், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் work from home செயல்முறையை முடிவிற்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.

IT நிறுவனங்கள்:

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக அச்சுறுத்தி வருவதால், IT நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்தது. கோவிட்-19 வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், விப்ரோ, காக்னிசன்ட், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அடுத்த மாத தொடக்கத்தில் அலுவலகங்களுக்கு அழைக்கலாம் என்பதால் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். பெங்களூருவை தளமாகக் கொண்ட விப்ரோ மார்ச் 3 ஆம் தேதிக்குள் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர கேட்டுக் கொண்டுள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விரைவில் கலப்பு மருந்து!

முதல்கட்டமாக வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டும் தற்போதைக்கு அழைக்கப்படுவார்கள். காக்னிசென்ட் தனது அலுவலகங்களை ஏப்ரல் மாதத்திற்குள் திறக்க திட்டமிட்டுள்ளது. இன்ஃபோசிஸ் அதன் அலுவலகங்களை அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அதிக அளவிலான ஊழியர்களுக்கு அழைப்பை விடுத்துள்ளது. இன்ஃபோசிஸில், எச்.ஆர்., எக்ஸிகியூட்டிவ் துணைத் தலைவர், ரிச்சர்ட் லோபோ, அதன் ஊழியர்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் வீட்டில் இருந்து பணிபுரிகின்றனர் என்றும், நிறுவனம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இந்த முறையை கடைபிடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பிப்.19ம் தேதி அரசு விடுமுறை – மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை! புகார் எண்கள் அறிவிப்பு!

காக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர், ஏப்ரல் முதல், காக்னிசன்ட் நிறுவனமானது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது. ஓமைக்ரான் மாறுபாட்டின் நிச்சயமற்ற பாதையை நாங்கள் கண்காணித்து வருவதால், ஏப்ரல் 2022 முதல் படிப்படியாக அலுவலகத்திற்கு பணியாளர்கள் அழைக்கப்படுவார்கள். அதுவரை நேரடியாக அலுவலக்திற்கு வருவது தடை செய்யப்படும். ஹைப்ரிட் முறையில் அலுவலர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்தும், வீட்டில் இருந்து இரண்டு நாட்களும் பணியாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!